விஜயதசமி

விஜயதசமி என்பது வெற்றித் திருநாள். விஜயதசமி நாளில் தொடங்கும்
காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. பாரம்பரியமாக நம்
முன்னோர்களின் வழியை நாமும் கடைபிடித்து வருவதால் இன்று எம்
பள்ளியில், குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்திற்கு அடியெடுத்து
வைக்கும் மழலையர்களை இனிதே வரவேற்று, மழலையர் சேர்க்கை ஆகம
விதிப்படி நடைபெற்றது.
மழலையர்களின் பெற்றோரும், எம் பள்ளித் தாளாளரும், பள்ளி முதல்வரும்,
ஒருங்கிணைப்பாளர்களும், ஆசிரியப் பெருமக்களும் வாழ்த்தி,
மழலையர்களுக்கு இன்று கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. மழலையர்களும்
மகிழ்வுடன் கல்வி கற்றனர்.