இணைய வழி பொங்கல் திருவிழா

இணைய வழி பொங்கல் திருவிழா: தமிழரின் திருநாளான பொங்கல் திருவிழா (11.01.2021) அன்று நடைபெற்றது.

நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருளால் பொங்கல் பொங்க, இறைவணக்கத்துடன் விழா இனிதே தொடர்ந்தது. “உழவுத்  தொழிலின் பெருமையையும் பாரம்பரிய விளையாட்டுக்களின் நன்மையையும், மாசில்லா உலகம் படைப்போம்” என்ற கருத்தையும் மையமாகக் கொண்டு, மாணவச் செல்வங்கள் இணையதளத்தின் வழியாக, முத்தமிழில் சிந்தனைக்கு விருந்தளித்தனர்.