பொங்கல் விழா

பொங்கல் விழா

பொங்கல் விழா எம் பள்ளியில் 14.01.2020 அன்று இறை வணக்கத்துடன் தொடங்கியது. மாணவிகளின் நாட்டுப் புறப்பாடலுக்கான நடனம் கண்களுக்கு விருந்தளித்தன. மாணவர்கள் பாடிய நாட்டுப் புறப்பாடல் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. மாணவர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற ‘கயிறுஇழுத்தல்’ போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று மனமகிழ்வுடன் சொல்ல பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது.